கர்நாடக ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்திலிருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் நித்யானந்தாசாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அந்த சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை உத்தரவிடபட்டது. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நித்யானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த 18 தேதி கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட […]
