விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் சட்ட பேரவையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்.. […]
