அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்பு, மரியாதைக்குரிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலே ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சிறு […]
