பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொது மக்களிடம் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்.. முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் […]
