சீனாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய தினம் நேற்று முன்தினம் சீனா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனால் நேற்று முன்தினம் தொடங்கி எட்டு நாட்கள் வரை தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிப்படைந்து உள்ள பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. […]
