ஸ்விட்ஸர்லாந்தில் பிரிட்டனை சேர்ந்த குடும்பத்தினர் கேரவன் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஸல் மண்டலத்தின் Duggingen என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் பிரிட்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சுமார் 78 ஆயிரம் பிராங்குகள் மதிப்புடைய கேரவன் ஒன்றை திருடிய போது காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டினர். அதாவது அந்த கேரவனை மற்றொரு வாகனத்துடன் சேர்த்து இழுத்து செல்ல முயன்றபோது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டனர். இதுமட்டுமல்லாமல் கேரவனின் ஓட்டுநர் தப்ப முயன்றுள்ளார். அவரை பிடித்து ரத்த பரிசோதனை […]
