கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். […]
