கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் […]
