மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரது சுதா என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக சுதா தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே வீட்டில் மனைவி மற்றும் […]
