கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்ற 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை எதிரொலியாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 39.69 அடி நீர் இருப்பு இருக்கிறது. அத்துடன் அணைக்கு நீர்வரத்துவினாடிக்கு 438 கனஅடியாக அதிகரித்து, வினாடிக்கு 328 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்ற 3 […]
