மதுபோதையில் ஒருவர் கூலி தொழிலாளியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் 24 – ஆம் தேதியன்று பொன்னியம்மன் கோவில் பகுதியில் மது அருந்திவிட்டு மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். அந்த தகராறில் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கணேசனை குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
