ஜலகண்டாபுரம் அருகில் வாலிபரை ஈட்டியால் குத்திய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கேசவன் (23) மற்றும் கூலித் தொழிலாளியான ராமச்சந்திரன் (34). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செலவடை பக்கத்தில் கருப்பசாமி கோவில் அருகே கேசவன், ராமச்சந்திரன் மற்றும் நண்பர் மகாலிங்கம் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்துக் கொண்டிருந்தார்கள். […]
