ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கூலித்தொழிலாளி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள பொதுப் பாதை அடைக்கப்பட்டதின் காரணத்தினால் கருப்பையா காவல் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கருப்பையா ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் கருப்பையா குறை தீர்க்கும் கூட்டம் […]
