மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செங்கப்பள்ளி பகுதியில் வினோத் (எ) சண்முக மூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் நிஷாலினி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணியம்மாள் கோபித்துகொண்டு மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. […]
