கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின் கூலி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த நவம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தையின் வாயிலாக புதிய கூலி உயர்வு இறுதி செய்யப்பட்டது. 7 வருடங்களுக்கு பின் கூலி உயர்வு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்கள் இருந்தனர். ஆனால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கொடுக்க வேண்டிய புதிய கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக வேறு வழியின்றி விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் […]
