திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]
