குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]
