மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், […]
