சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு நேருஜி நகரில் இருக்கும் குழாய் கம்பேனியில் சட்ட விரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து 2 மாடி கட்டிடம் தரைமட்டம் ஆனது. இது குறித்து தகவலறிந்து வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.. இதையடுத்து கம்பெனியில் பணிபுரிந்த மனோஜ்குமார், வேல்முருகன் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் மீட்டு […]
