ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை திருத்த ஆவணங்களை வழங்க கோரி தாய், மகள்கள் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 17ஆம் தேதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் முன்பாக மலைக்கன்னிகாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து ஆட்சியர் விசாரணை செய்ததில் விஜயலட்சுமி தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரின் பூர்வீக வீட்டு மனை 300 சதுர மீட்டர் ஆகும். […]
