கனடாவின் மேற்கு பகுதியில் ஆர்டிக் பனிப்புயல் காரணமாக கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. அங்கு பல்வேறு இடங்களில் -55 சென்டிகிரேடு அளவுக்குக் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் பனிப் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. இதனிடையில் வான்கூவரில் சாலையோரத்தில் பயணிகள் குவிந்து உள்ளது. இதில் குழந்தைகள் மகிழ்ச்சியாக சறுக்கி விளையாடி வருகின்றனர். மேலும் கேல்கரி பனிமலையில் பொதுமக்கள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
