உக்ரைன் போர் காரணமாக குழந்தைகள்,பெண்கள் மெட்ரோ சுரங்கப் பாதைகளில் வந்து தஞ்சம் அடைந்து அவதிப்படுகின்றனர். உக்ரைன் தலைநகரம் கீவ்வில் போர் காரணமாக ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 24வது நாளை எட்டிய நிலையில் இந்த சுரங்கப் பாதைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் பெரிதும் சிரமப்படுகின்றனர். […]
