தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இவர் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை. எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம். அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் […]
