தேனியில் ஊரடங்கு விதியை மீறி இயங்கிவந்த குளிர்பான ஆலைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊரடங்கு விதியை மீறி தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் திறக்கப்படுகிறது என்று அரசு அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அப்புகாரின் பேரில் ஆண்டிப்பட்டியினுடைய தாசில்தாரான சந்திரசேகரன் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளின் தலைமையிலான குழுவினர்கள் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது 9 ஆவது வார்டிலிருக்கும் நாடார் தெருவில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான ஆலை ஊரடங்கு விதியை […]
