வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்- தொப்பபாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் என்ற மகனும் ரக்ஷனா என்ற மகளும் இருந்தனர். இவர்களின் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் லட்சுமி எடுத்துக் குடித்துள்ளார். அதை ரக்ஷனாவிருக்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]
