தெலுங்கானாவில் குளியலறையில் புதுமண தம்பதியினர் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் காதர் பாக் என்னும் பகுதியில் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) என்னும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சையது சூரியா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் அவரது மனைவி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். […]
