குடும்பத்துடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் பாலசுப்பிரமணியம்(46) என்பவர் அவரது மனைவி செல்வி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆடிப்பெருக்கை கொண்டாட சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 5 பேரும் […]
