கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் தேவசகாயம் ஆலயத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் ஒன்று இருக்கிறது. இக்குளத்தில் சென்ற சில வாரங்களாக இரவு வேலையில் மர்மநபர் ஒருவர் இறைச்சி கழிவுகளை கொட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்தது. அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் குளத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் மோட்டார்சைக்கிளில் பிளாஸ்டிக் பெட்டியில் இறைச்சி கழிவுகளை ஏற்றியபடி குளத்தில் கொட்டுவதற்கு வந்துள்ளார். […]
