கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போடுவதற்கு பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகிய ஏராளமான வாகனங்கள் வந்தது. பெட்ரோல் போட்ட வாகனங்களில் சிறிது நேரம் கழித்து இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சிலர் தங்கள் வாகனங்களைத் தள்ளி சென்றனர். மேலும் சிலர் இன்ஜினில் பிரச்சினை என்ற சந்தேகத்தால் மெக்கானிக்யிடம் சென்று சோதனை நடத்தியபோது பெற்று உள்ளே தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. […]
