எரிவாயு மின்தகன வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் உள்ள எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் வேலையை ஜோதி செய்து வந்த நிலையில் தனுஷ் அடிக்கடி […]
