குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மீன் கடைக்காரரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் காவல்துறையினர் சேந்தமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜேடர் தெருவில் சென்றபோது ஒரு நபர் மொபட்டில் இருந்து சாக்குமூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(50) என்பது தெரியவந்தது. மீன்கடை […]
