சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் மூன்று மாத குழந்தைக்கு தான் வாய், காது இருக்காது என்று கூறினார். குறைப்பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். […]
