தொல் தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்ககோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும். இருப்பினும் அவர்களின் மற்றொரு மிக முக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் […]
