அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. […]
