மாற்றுத்திறனாளி பெண் கொலை வழக்கில் மும்பை பெண்ணின் காதலனை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேஜ்மண்டல் சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பட்டியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சங்கர்நகர், பள்ளப்பட்டி போன்ற இடங்களில் அழகு நிலையம் நடத்தி வந்தார். கடந்த 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலை தொடர்பாக தேஜ்மண்டலுடன் தங்கியிருந்த ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவரை […]
