குப்பையில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்துள்ள சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் அந்தோணி விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.எம். கார்டு போன்ற ஏராளமான அட்டைகள் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவர்கள் அந்தோணி விஜய்யிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து அந்தோணி விஜய் கிராம நிர்வாக அலுவலர் ஜெபஸ்டினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]
