நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]
