சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையிலுள்ள குப்பைத் தொட்டியில் சணல்பையிலிருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வியிழுத்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் காவகத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். அதன்பின் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்தநிலையில் பிறந்த […]
