குப்பையில் வைக்கப்படும் தீயால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மர்மநபர்கள் குப்பை மற்றும் கழிவுகளை அடிக்கடி தீ பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகேயும் மர்மநபர்கள் குப்பையில் தீயை பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் […]
