சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த பெண் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் இளங்கோ நகரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி ராணி.. இவருக்கு வயது 60 ஆகிறது.. தமிழரசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு வள்ளி(35) மற்றும் ராஜேஸ்வரி (32) என்ற இரு மகள்கள் உள்ளனர்.. இதில் வள்ளி என்பவர் அதே ஊரை சேர்ந்த ராம்குமாரை திருமணம் செய்து விட்டார்.. […]
