குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திப்புரத்திலுள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டதில் கடந்த 1998 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஆர்.எஸ் புரம் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே ஆண்டுதோறும் குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அவ்வகையில் கோவை கமிஷனர் பிரதீப் குமார், […]
