மசூதியின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹதின் தாயார் அவர்களுக்கு நேற்று முன்தினம் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மசூதியின் நுழைவாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த […]
