மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]
