குண்டம் திருவிழாவை முன்னிட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் சிறப்பாகத் […]
