லாரியில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடிக்கு பெங்களூரில் இருந்து சேலம் வழியாக குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக ஓமலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.சி.செட்டிப்பட்டி என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 40 மூட்டை பான்பராக், 5 மூட்டை குட்கா கம்பளி […]
