வேலூர் மாவட்டத்தில் அதிகாலையில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியை சேர்ந்த முனீர் என்பவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கழிவு குடோன் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை பவுடராக மாற்றி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது. […]
