18 மாதங்களுக்கு முன்பு தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலுடன் ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுக் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பலர் உயிரிழந்தனர். அதேபோன்று கொரோனா தொற்று இரண்டாவது அலையில் உயிரிழந்தவர் தான் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த விம்லேஷ்குமார். வருமானவரித்துறை அதிகாரியாக இருந்த இவர் கடந்த ஆண்டு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். […]
