காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]
