ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]
