குடிபோதையில் ஓட்டுநர் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் இ.மண்டகப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன்(56). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் நேற்று மதியம் 2.30 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து தடம் எண் 281 என்ற அரசு பேருந்தை சென்னையை நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது அந்த பேருந்தில் சிவகத்துல்லா என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்தப் பேருந்தில் […]
